வெளியே வந்தார் ராஜகோபால்; கடலில் முழுக்குப் போட்டார்!
சென்னை:
ஜீவஜோதியின் கணவர் கொலை வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சமீபத்தில் உயர் நீதிமன்றத்தால் ஜாமீன்வழங்கப்பட்ட சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் வேலூர் மத்திய சிறையிலிருந்து நேற்று வெளியே வந்தார்.
ஜாமீனில் விடுதலையாகி சென்னை வந்த அவர் கடலில் முழுக்குப் போட்டு விட்டு வீடு திரும்பினார்.
வேலூர் சிறையிலிருந்து ராஜகோபால் தவிர டேனியேல், கார்மேகம், ஜாகீர் உசேன், காசி, பட்டுராஜன் ஆகியோரும் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.
ராஜகோபாலையும் மற்றவர்களையும் அவரது மகன் சரவணன் மற்றும் சரவண பவன் ஹோட்டல் ஊழியர்கள் வரவேற்றனர்.
பின்னர் அனைவரும் வேலூர் அருகே உள்ள ரத்தினகிரி சுப்ரமணியசுவாமி கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து சென்னை வந்த அவர்கள் கடலுக்குச் சென்று குளித்து தலைமுழுகினர்.
அதன் பின்னர் வடபழனி முருகன் கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்ட அவர்கள் பின்னர் தான் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர்.-
ஜாமீனில் வெளியே வந்துள்ளது குறித்து அண்ணாச்சி ராஜகோபாலிடம் நிருபர்கள் கேட்டபோது, எல்லாம் முருகன் செயல் என்று பதில்தந்த அவர், அதற்கு மேல் பேச மறுத்துவிட்டார்.
நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ள அண்ணாச்சி, தினமும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
இந் நிலையில் ஜீவஜோதி, போயஸ் கார்டனுக்கு நெருக்கமான மகா மனிதரின் பாதுகாப்புடன் தஞ்சையில் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications