இந்திய விமானங்களை கடத்த அல்-கொய்தா திட்டம்?
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
இந்திய விமானங்களைக் கடத்தவும், அமெரிக்காவில் நடத்தியதைப் போன்ற தாக்குதல்கள் நடத்தவும்அல்-கொய்தா திட்டமிட்டிருப்பதாக உளவுப் பிரிவுகள் எச்சரிக்கை விடுத்தன.
இதையடுத்து இந்திய விமான நிலையங்களில் பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள.
குறிப்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானக் கடத்தல் நடக்கலாம் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளதால், அங்கு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று முதல் திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரமாகியுள்ளது.
அதிகபட்ச கண்காணிப்பில் இருக்குமாறு விமான நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்தியதொழில்துறை பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications