அவசரமாய் தரையிறங்கிய ஏர்-இந்தியா விமானம்
Subscribe to Oneindia Tamil
மும்பை:
கொச்சியிலிருந்து துபாய்க்கு 126 பயணிகளுடன் கிளம்பிய ஏர்-இநியா விமானத்தில் மிகப் பெரியகோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் மிக அவசரமாக மும்பை சத்ரபதி சர்வதேசவிமான நிலையத்தில் தரையிறங்கியது.
விமானத்தின் சக்கரத்தை இயக்கும் ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஏற்பட்ட கோளாறையடுத்து,விமானத்தை அவசரமாகத் தரையிறக்க விமானி முடிவு செய்தார்.
இதையடுத்து அந்த விமானம் தரையிறங்கியபோது விமான நிலையத்தில் அவசரகால நிலைபிரகனடப்படுத்தப்பட்டது. இருப்பினும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி விமானம்தரையிறங்கியது.












Click it and Unblock the Notifications