நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் அமளி-துமளி
டெல்லி:
மிகவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர்இன்று தொடங்கியது.
ஆனால், கிரிமினல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் என்றுகோரி பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், கூட்டம் தொடங்கியவுடன் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பின் கூடும் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இது.நாளை (6ம் தேதி) ரயில்வே பட்ஜெட் தாக்கலாகிறது. 7ம் தேதி பொது பட்ஜெட் தாக்கல்செய்யப்படவுள்ளது.
4 மாநில பா.ஜ.க. ஆதரவு கவர்னர்களை காங்கிரஸ் அரசு பதவி நீக்கம் செய்தது, குற்ற வழக்குகளில்தொடர்புடையவர்களை மத்திய அமைச்சர்களாக்கியது ஆகிய விவகாரங்களை வைத்து இன்றுகாலை கூட்டம் தொடங்கியதும் பா.ஜ.க. உறுப்பினர்கள் பிரச்சனை கிளப்பினர்.
அவையின் மையத்தில் கூடி கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஷ்ட்ரீய ஜனதா தளஅமைச்சர்களை நீக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதற்கு ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனால் அமளி-துமளி ஏற்பட்டது.
இதையடுத்து கூட்டத்தை ஒரு மணி நேரத்துக்கு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஒத்தி வைத்தார்.ஆனால், மீண்டும் அவை துவங்கியதும் மீண்டும் அமளி ஏற்படவே இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதே போல ராஜ்யசபாவிலும் பிரச்சனை ஏற்பட்டதால், அதுவும் நாள் முழுவதும்ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கிடையே நாளை தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் ரயில்களில் முதல்வகுப்புக்கான கட்டணத்தை உயர்த்த அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் திட்டமிட்டிருப்பதாகத்தெரிகிறது.
அதே போல பொது பட்ஜெட்டில், பிராவிடண்ட் பண்ட் எனப்படும் ஊழியர்களின் சேம நல நிதிக்கும்வரி விதிக்க நிதியமைச்சர் ப.சிதம்பரம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்தக் கூட்டத் தொடர் செப்டம்பர் 3ம் வரை நடைபெறவுள்ளது.
கூட்டத் தொடரை அமைதியாக நடத்த உதவுமாறு பா.ஜ.க. மக்களவைத் தலைவர் அத்வானிக்குபிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு பலன்கிடைக்கவில்லை.
இதற்கிடையே நாளை தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டை புறக்கணிக்க பா.ஜ.க.முடிவு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications