பி.இ, எம்பிபிஎஸ்: மகா குழப்பத்தில் மாணவர்கள்
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 7ம் தேதி வரை முதலில் இந்த கவுன்சிலிங் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் தவறானவை என்று சில மாணவர்கள்தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
அதே போல இம்ப்ரூப்மெண்ட் தேர்வெழுதிய மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேருவதை எதிர்த்துதாக்கலான வழக்கும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
இந்த இரு வழக்குகளும் சேர்த்து வரும் 9ம் தேதி விசாரிக்கப்படவுள்ளன. இதனால் 8ம் தேதி(நாளை) தொடங்க இருந்த கவுன்சிலிங் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இதனால், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த கல்வி ஆண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல்படிப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இரு படிப்புகளுக்குமான கவுன்சிலிங்குக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் இருபடிப்புகளுக்குமான மாணவர் சேர்க்கையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் குழப்பத்திலும்கவலையிலும் ஆழ்ந்து போயுள்ளனர்.
இந்தக் குழப்பங்கள் காரணமாக திட்டமிட்டபடி கல்லூரிகளைத் திறக்க முடியாது என ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.இதனால், செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிப் போகும்.
மருத்துவக் கல்வியைப் பொருத்தவரை செப்டம்பர் 30ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை முடிந்து விட வேண்டும்.ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் தற்போது உள்ளநிலவரத்தைப் பார்த்தால் அது சாத்தியமில்லை என்றே தெரிகிறது.
இதேபோல, பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 2வது வாரத்தில் அண்ணாபல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் வரும் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கி விடும். சுய நிதிக்கல்லூரிகளில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும்.
இந்த ஆண்டு இந்தக் கல்லூரிகளில் முதல் செமஸ்டர் ஆரம்பிப்பதும் தள்ளிப் போகவுள்ளது.
இதுபோதாதென்று அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் இடம் கிடைக்காத மாணவர்கள், சுய நிதிக்கல்லூரிகளில் சேர வேண்டும் என்றால் தனியாக நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்று புதிய விதிசேர்க்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மேலும் குழம்பிப் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications