லாலுவுக்கு கருணாநிதி ஆதரவு: ஜெவுக்கு கண்டனம்
சென்னை:
மிகச் சிறப்பான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளதாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்யாதவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த பட்ஜெட்டால் ஒரு பயனும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள நிலையில்கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், மக்கள் ஆதரவு பட்ஜெட்டைதாக்கல் செய்துள்ள லாலு பிரசாதை பாராட்டுகிறேன்.
பட்ஜெட்டை குறை சொல்லியே ஆக வேண்டும் என்பதற்காக குறை சொல்லியிருக்கிறார் முதல்வர்ஜெயலலிதா.
பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது பா.ஜ.கவை இடித்துரைத்த லாலு, கிரிமினல் வழக்கில்தொடர்புடைய ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க. மத்திய அமைச்சர்கள் மீதுவழக்குகள் உள்ளதாக சொல்லி பதவி விலகக் கோருவது எந்த வகையில் நியாயம் என்று கேள்விஎழுப்பினார்.
அந்தக் கோபத்தைத் தான் பட்ஜெட் மீது காட்டியிருக்கிறார் ஜெயலலிதா.
இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கு எதிரானது என பா.ஜ.கவினர் சொல்லியிருக்கிறார்கள்.தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரயில்வே வேலைகளில் இட ஒதுக்கீடுதந்திருக்கிறார் லாலு. இதைத் தான் வளர்ச்சிக்கு எதிரானது என்கிறார்கள் பா.ஜ.க.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் வளர்ச்சி என்பது பா.ஜ.கவைப் பொறுத்தவரைநாட்டின் வளர்சிக்கு எதிரானது.
ஜெயலலிதா, பா.ஜ.கவைப் பொறுத்தவரை லாலு பிரசாத் தங்களது முற்பட்ட ஜாதியைச் சேராதவர்என்பதால் அவரை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்த்து வருகின்றனர்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications