விரைவில் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி - திருச்சி:

காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் விரைவில் கூட்டப்படும் வாய்ப்பிருப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கர்நாடக அணைகள் மற்றும் மேட்டூரில் உள்ள நீர் மட்டம், சாகுபடி செய்யப்பட்ட பயிர்களின் நிலை, அவற்றிற்குத்தேவையான தண்ணீர், பற்றாக்குறை காலத்தில் காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான வழிகாட்டுமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் தலைமையிலான காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், மாநில தலைமைச்செயலாளர்கள், அதிகாரிகள் பங்கேற்பார்கள். தற்போது, மேட்டூர் அணைக்கு போதுமான தண்ணீர்சென்றுகொண்டிருப்பதாலும்,

நல்ல மழை பெய்திருப்பதாலும் பிரதமர் தலைமையிலான காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெறுவதற்கானவாய்ப்புகள் இல்லை என்று நீர்வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேட்டூரை திறக்க கோரிக்கை:

இந் நிலையில் மேட்டூர் அணையைத் திறந்து விட வேண்டும் என்று திருச்சி காவிரி பாசனப் பகுதி விவசாயிகள்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அந்த சங்கத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையில்,ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு 42.7 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும். இந்தத் தண்ணீரைப் பெறஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் பின்னர் காவிரி பாசனப் பகுதி விவசாயிகளுக்காக மேட்டூர் அணையைத் திறந்து விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+