இப்போது ஓய்வு பெறமாட்டேன்: டெண்டுல்கர்
லண்டன்:
கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின்முன்னணி வீரர் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
டெண்டுல்கருக்கு தற்போது வயது 31. வயது ஏறுவதாலும், அடிக்கடி முதுகுவலியால் அவதிப்படுவதாலும்ஆட்டத்தில் இருந்து அவர் ஓய்வு பெறக்கூடும் என்று பேச்சு கிளம்பியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சச்சின்கூறியிருப்பதாவது:-
எனக்கு 31 வயதுதான் ஆகிறது. முன்பு வீரர்கள் இந்த வயதில்தான் தங்கள் ஆட்டத்தை தொடங்கி உள்ளனர்.இப்போது ஓய்வு பற்றிய எண்ணம் எதுவும் இல்லை. நீண்ட காலம் தொடர்ந்து ஆடுவேன் என்ற நம்பிக்கை எனக்குஉள்ளது.
எல்லா விஷயத்துக்கும் ஒரு முடிவு இருப்பதுபோல் எனது கிரிக்கெட் ஆட்டமும் ஒரு நாள் முடிவுக்கு வரும்.ஆனால் கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை சிந்திப்பதே கடினமானதாக இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிராக அண்மையில் நடந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்றதுமறக்க முடியாத மகிழ்ச்சியாகும் என்று கூறினார்.
இலங்கையில் வரும் 16ம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்தியஅணி வீரர்கள் நாளை சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறது.












Click it and Unblock the Notifications