காஞ்சி: நெசவாளர்கள் மீது போலீஸ் தடியடி தாக்கு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் அரசுக் கூட்டுறவு பட்டு விற்பனைக் கழகங்களின் பெயர்களை வைத்துக் கொண்டு, முறைகேடுகளில்ஈடுபட்டு வரும் தனியார் பட்டு விற்பனை நிலையங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய நெசவாளர்கள் மீதுபோலீஸார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் ஏராளமான பட்டு விற்பனை கழகங்கள் உள்ளன. பல்வேறு அரசு கூட்டுறவுபட்டு விற்பனைக் கழகங்களும் இப் பகுதியில்தான் உள்ளன.

இந் நிலையில் சமீப காலமாக அரசு விற்பனைக் கழகங்களின் பெயர்களையே வைத்துக் கொண்டு பல தனியார்கடைகள் இயங்க ஆரம்பித்துள்ளன. இவற்றின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த கடைகளில் போலியான, தரமற்ற பட்டுச் சேலைகள், துணிகள் விற்பதாகவும், இதனால் அரசு கடைகளில்வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைய ஆரம்பித்துள்ளதாகவும் பட்டு நெசவாளர்கள் புகார் கூறுகின்றனர். இதனால்காஞ்சிப் பட்டுக்கு மதிப்பும் குறைந்து தங்களது தொழிலே பாதிக்கப்படுவதாக தொழிலாளர்கள் கூறி வருகின்றனர்.

இந் நிலையில் இன்று தனியார் கடைகளின் பெயர் பலகைகளை அகற்றும் போராட்டத்தை நடத்தப் போவதாகநெசவாளர்கள் அறிவித்திருந்தனர். இதனால் காந்தி சாலை பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

காலையில் பட்டு நெசவாளர்கள் கூட்டமாக வந்து தனியார் கடைகளின் பெயர்ப் பலகைகளை அகற்ற முயன்றனர்.இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் பயங்கரமாக தடியடி நடத்தினர். இதனால் நெசவாளர்கள் சிதறி ஓடினர்.இந்த தடியடியில் பல நெசவாளர்கள் காயமடைந்துள்ளனர்.

இதனால் காந்தி சாலை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+