மர்ம நோய் தாக்குதலில் அதிரடிப்படை வீரர்கள்
ஈரோடு:
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படை வீரர்களை மர்ம நோய் தாக்கி வருகிறது. இதனால்தேடுதல் வேட்டை பாதிக்கப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக அதிரடிப்படை வீரர்கள் சுமார் 750 பேர் மேட்டூர், ஆசனூர்,சத்தியமங்கலம், அந்தியூர், ஓகனேக்கல் உள்ளிட்ட வனப் பகுதிகளில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில்ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் பலருக்கு கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இவர்கள் முகாமிட்டுள்ள காட்டுப் பகுதிகளுக்கே டாக்டர்கள் வந்து சிகிச்சை அளித்துச் சென்றனர்.
இருப்பினும் இவர்களில் 80 பேருக்கு நோய் குணமாகாததால், அவர்கள் அனைவரும் நாமக்கல் கொண்டுவரப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். அவர்களுக்கு என்ன நோய் தாக்கியுள்ளது என்றுஇதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
80 வீரர்களுக்கும் ரத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மர்ம நோய் காரணமாகஅதிரடிப்படை வீரர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் தேடுதல் வேட்டையும் பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications