22ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.
தமிழக சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதன் மீது விவாதம்நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததால், உடனடியாக சட்டசபையைமுதல்வர் ஜெயலலிதா கூட்டவில்லை.
இந் நிலையில் ஜூலையோடு மாநில செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி காலியாவதாலும், வரும் பட்ஜெட்வரையிலான நிதியை ஒதுக்கீடு செய்யவும் இம் மாதம் கூட்டத் தொடரை நடத்திய ஆக வேண்டிய கட்டாயத்தில்தமிழக அரசு உள்ளது.
இந் நிலையில் வரும் 22ம் தேதி சட்ட சபையின் கூட்டம் தொடங்குவதாக ஆளுனர் ராம் மோகன்ராவ் இன்றுஅதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இக் கூட்டத் தொடரில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 41 மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படவேண்டும்.
மக்களவைத் தேர்தல் படுதோல்விக்குப் பிறகு அதிமுக சந்திக்கும் முதல் கூட்டத் தொடர் என்பதாலும், காவிரிப்பிரச்சினை, போலி முத்திரைத் தாள் பிரச்சினை, எம்பிபிஎஸ், பி.இ. நுழைவுத் தேர்வு குளறுபடி என பல்வேறுபிரச்சினைகளுக்கு மத்தியில் சட்டசபைக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளதால் கூட்டத் தொடர் முழுவதும் அனல்பறக்கும் எனத் தெரிகிறது.--












Click it and Unblock the Notifications