சிறுமியை மானபங்கப்படுத்திய சிறுவர்கள்!
சென்னை:
தங்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை 6 முதல் 10 வயது வரையுள்ள 3 மூன்று சிறுவர்கள்பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மோகன், கட்டையன்,பெருமாள், சுப்ரமணியன் ஆகியோர்.
இவர்கள் தங்களது குடும்பத்துடன், சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் உள்ள செங்கல் சூளையில் தங்கி கூலிவேலை பார்த்து வருகின்றனர்.
சூளைக்கு அருகேயே அவர்களது குடிசைகள் உள்ளன. இதநிநலையில் மோகனின் மகள் கெளசல்யா (வயது 6)மற்றும் மணி (6), பிரவீண் (10), மணிகண்டன் (10) ஆகியோர் குடிசைகளுக்குப் பின்னால் விளையாடிக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் கெளசல்யா அழுது கொண்டே வந்தாள். அவர் என்னவென்று விசாரித்தபோது, தன்னை 3சிறுவர்களும் துன்புறுத்தியதாகவும், ரத்தம் வருவதாகவும் கூறியுள்ளார்.
அதிர்ந்து போன கெளசல்யாவின் தந்தை உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குகெளசல்யாவை கொண்டு சென்றார். அங்கு அவளைப் பரிசோதித்த டாக்டர்கள், கெளசல்யா பாலியல் பலாத்காரம்செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்தனர்.
இதையடுத்து குன்றத்தூர் போலிஸில் மோகன் புகார் செய்தார். போலீஸார் 3 சிறுவர்களிடமும் விசாரணை நடத்திஅவர்களைக் கைது செய்த போலீசார், அவர்க சிறுவர் சீர்திருத்த வாரிய நீதிபதியின் முன் ஆஜர்படுத்தினர்.
மூவரும் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்படவுள்ளனர்.
சிறுமி கெளசல்யா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டாள்.












Click it and Unblock the Notifications