மன்மோகன், சோனியாவுடன் வைகோ சந்திப்பு
டெல்லி:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார்.
சோனியா காந்தியை வைகோ அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அமெரிக்காவில் இருந்ததால் ஐக்கியமுற்போக்கு கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என்று சோனியாவிடம் வைகோதெரிவித்தார்.
மேலும், நெல்லையில் நடந்த மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து சோனியா காந்தியிடம்விளக்கிக் கூறினார்.
பிறகு அவர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம்பேசிய வைகோ,
இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு ஆகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம்நடந்தபோது நான் அமெரிக்காவில் இருந்ததால் அக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது.இதுகுறித்தும், நெல்லையில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானங்கள் குறித்தும் பிரதமரிடமும்,சோனியாவிடமும் விளக்கின்ே என்றார்.












Click it and Unblock the Notifications