காயத்ரி, பிரியதர்ஷினிய காப்பாதுங்க சித்தப்பா
கும்பகோணம்:
தீயில் இருந்து காப்பாற்றப்பட்டபோது பல குழந்தைகளும் தங்களது நண்பர்களையும்காப்பாற்றுமாறு கதறியுள்ளனர். தங்களது உயிர் ஆபத்தில் இருந்த நேரத்திலும் உடன் பயின்றநண்பர்களுக்காக அந்தப் பிஞ்சுகள் குரல் கொடுத்துள்ளன.
தரணிகா என்ற சிறுமி தன் உடல் முழுவதும் தீயில் கருகிய நிலையில் காப்பாற்றப்பட்டு, பள்ளிக்குவெளியே கொண்டு வரப்பட்டுள்ளாள்.
ஆனால் அப்போது கூட, உடன் பயிலும் மாணவிகளின் பெயர்களைச் சொல்லி அவர்களைக்காப்பாற்றுமாறு கதறி அழுதபடியே, அடுத்த சில நிமிடங்களில் உயிர் விட்டுள்ளாள்.
பாரதிதாசன் என்பவரின் மகளான தரணிகாவை அவளது சித்தப்பா பள்ளிக்குள் ஓடிச் சென்றுகாப்பாற்றியுள்ளார். அப்போதே அவள் உடல் வெந்து போய்விட்டது.
கையில் அவளை ஏந்திக் கொண்டு சித்தப்பா வெளியில் ஓடி வந்தபோது,
சித்தப்பா, என் கூட படிக்கிற காயத்ரி, பிரியதர்ஷினி, செல்வி இவங்க எல்லாம் தீயிலமாட்டியிருக்காங்க.. அவங்களை காப்பாத்துங்க.. சித்தப்பா என்று கதறியிருக்கிறாள் பிஞ்சுக்குழந்தையான தரணிகா.
இதையடுத்து சரிம்மா காப்பாத்துறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் பள்ளிக்குள் ஓடிச் சென்றுகையில் சிக்கிய குழந்தைகள் சிலரை அள்ளிக் கொண்டு வெளியே வந்திருக்கிறார் சித்தப்பா.
ஆனால், அதற்குள் தரணிகா இறந்துவிட்டாள்.
தீக் காயங்களுடன் தரணிகாவின் சித்தப்பாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தரணிகாவின் தந்தை பாரதிதாசன் கூறுகையில், அந்தச் சூழ்நிலையிலும் உடன் படிக்கும்தோழிகளைக் காப்பாற்றுமாறு சொன்ன என் மகளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
என் மகள் இப்போது உயிருடன் இல்லை. ஆனால், அவளது தைரியம், நட்புணர்வை நினைத்தால்பெருமையாக இருக்கிறது. சில உயிர்களைக் காத்த என் தம்பியையும் நினைத்துப்பெருமைப்படுகிறேன் என்றார் கண்களில் நீர் வழிய.
தம்பியை காப்பத்தலை.. கதறும் சிறுமி:
காயத்ரி என்ற சிறுமி தீயில் இருந்து தப்பி வெளியில் ஓடி வந்து தப்பிவிட்டாள். ஆனால், அவளதுதம்பியான ஜெயப்பிரகாஷ் தீக்குப் பலியாகிவிட்டான்.
இதைச் சொல்லிச் சொல்லி அழும் காயத்ரி, நான் மட்டும் தப்பிச்சு வந்துட்டேன், என் தம்பி பாவம்...நான் அவனை காப்பாத்தலயே என்று அரற்றியவண்ணம் இருக்கிறாள்.












Click it and Unblock the Notifications