சென்னை அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
சென்னை:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில், 7வது மாடியில் உள்ள இருதய அறுவைச் சிகிச்சைப் பிரிவில் இரண்டுஅறுவை சிகிச்சை தியேட்டர்கள் உள்ளன. இதில் ஒரு தியேட்டரில் ஒரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சைக்கானஏற்பாடுகளை மருத்துவர்கள் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது தியேட்டரின் மேற்பகுதியிலிருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து உடனடியாக தீயணைக்கும்கருவிகளைக் கொண்டு மருத்துவர்களும், பிற ஊழியர்களும் சேர்ந்து தீயை அணைத்தனர்.
தீயணைக்கும் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் தீ முழுமையாகஅணைக்கப்பட்டு விட்டது.
தீவிபத்து தொடர்பான தகவல் மருத்துவமனையில் பரவியதும், கும்பகோணம் பீதி முகத்தில் பரவ நோயாளிகள்அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் தீவிபத்து மிகச் சிறிதானது என்றும், உடனடியாக தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் தீயணைக்கும் படையினர் தெரிவித்தனர்.