For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குடந்தையில் கருணாநிதி: நிதியுதவி வழங்கினார்

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

Karunanidhiகும்பகோணத்தில் தீ விபத்தில் பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்றுநேரில் ஆறுதல் கூறியதோடு, திமுக சார்பில் நிவாரணத் தொகையையும் வழங்கினார்.

கருணாநிதி இன்று காலை கார் மூலம் கும்பகோணம் சென்றார். அவருடன் திமுக முன்னாள் அமைச்சர்கள்துரைமுருகன் , கோ.சி.மணி மற்றும் நடிகர் நெப்போலியன் ஆகியோர் உடன் சென்றனர்.

முதலில் கிருஷ்ணா பள்ளிக்கு சென்று மலர் வளையம் வைத்து, மறைந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அரசு மருத்துவமனைக்கு சென்ற கருணாநிதி, அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கும் அவர்களதுபெற்றோர்களுக்கும் ஆறுதல் கூறினார்.

பின்னர் ராயா மஹாலில், தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் விபத்தில் காயமடைந்தகுழந்தைகளின் 112 குடும்பங்களுக்கு தலா ரூ. 25,000 நிதியுதவியை வழங்கினார். மொத்தம் ரூ. 28 லட்சத்தைவழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இச் சம்பவம் தொடர்பாக, தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது நிரபராதிகள் யாரும்தண்டிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கல்வி வியாபாரமாகி வருவதை மாற்ற வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X