அமைச்சருக்கு கைது வாரண்ட்: தலைமறைவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
கொலை வழக்கில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின்தலைவருமான சிபு சோரேனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அவர்தலைமறைவாகிவிட்ட விவகாரம் நாடாளுமன்றத்தை இன்று ஸ்தம்பிக்க வைத்தது.
மக்களவை, மாநிலங்களவை ஆகியவை கூடியதும் பா.ஜ.க. தலைமையிலான எதிர்க் கட்சிஎம்.பிக்கள் எழுந்து அரசுக்கு எதிராக கூச்சலிட்டனர்.
சோரேனை உடனே கைது செய்ய வேண்டும், அவரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனகோஷம் எழுப்பினர். மேலும் இந்த நேரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அவைக்கு வராமல்இருப்பதையும் சுட்டிக் காட்டி கோஷமிட்டனர்.
இதனால் அவைகளில் பெரும் அமளி நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications