சாவு எண்ணிக்கை 93 ஆக உயர்வு
கும்பகோணம்:
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் நடந்த தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்தது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 90 குழந்தைகள் கருகி இறந்தன. 16 குழந்தைகள்படுகாயத்துடன் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 சிறுமிகள் இறந்துள்ளனர். 3வது வகுப்புபடித்து வந்த ஜனனி என்ற சிறுமி முதலில் இறந்தாள். ஜனனியைத் தொடர்ந்து வெங்கடேசன் என்பவரின் மகளானமீனா என்ற சிறுமியும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள்.
இன்று அதிகாலை மாரியம்மாள் என்ற மற்றொரு சிறுமியும் இறந்தாள். இதைத் தொடர்ந்து சாவு எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது.
இந்த 3 சிறுமிகளின் குடும்பங்களுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications