திமுக, அதிமுக பலப்பரிட்சை!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை உயர் நீதிமன்றக் கிளை திறப்பு விழாவில் திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் பெருமளவில்கலந்து கொண்டு, ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

உயர் நீதிமன்றக் கிளை திறப்பையடுத்து மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.போஸ்டர்களுக்குப் பெயர் போன மதுரையில், எங்கெங்கு காணினும் நீதிமன்றத் திறப்பு தொடர்பானவெற்றி விழா போஸ்டர்களே காணப்பட்டன.

நீதிமன்றத்தை இங்கு தொடங்க நாங்கள் தான் காரணம் என்று சொல்லி, திமுகவினரும்,அதிமுகவினரும் போட்டி போட்டு போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர்.

திமுகவினரின் போஸ்டர்களில் உயர் நீதிமன்றக் கிளை வர காரணமாக இருந்த கருணாநிதிக்கு நன்றிஎன்றும், அதிமுக போஸ்டர்களில், உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படுவதற்கு வழி வகுத்தஜெயலலிதாவுக்கு நன்றி என்று வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

சட்டத்துறை இணையமைச்சராக திமுகவைச் சேர்ந்த வேங்கடபதி இருக்கும் நிலையில், இந்தவிழாவுக்கு ஜெயலலிதாவை மத்திய சட்டத்துறை அழைக்கவில்லை.

ஆனாலும் விழாவில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். அதே போல திமுக தொண்டர்களும்பெருமளவில் குழுமியிருந்தனர். சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி பேசியபோது,திமுகவினர் ஆரவாரத்துடன் கைதட்டினர்.

அதேபோல, மாநில சட்டத்துறை அமைச்சரான ஜெயக்குமார் பேசுகையில், அதிமுகவினர் பலத்தஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பினர். போட்டி போட்டுக் கொண்டு வாழ்த்துக் கோஷம்எழிப்பியதோடு அவ்வப்போது இரு தரப்பினரும் முறைத்தும் கொண்டதால், பரபரப்பும் ஏற்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா விழாவுக்கு வரவில்லை என்றாலும் கூட அதிமுகவினர் உற்சாகத்துடன் கலந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமாருக்கு உறுதுணையாக இருந்ததால் அவரும் தனிமை உணர்வைமறந்து புன்னகையுடன் காணப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+