குப்பையில் கொட்டப்பட்ட ஜனநாயகம்
சென்னை:
சென்னை தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 400க்கும் மேற்பட்ட புகைப்பட வாக்காளர் அடையாளஅட்டைகள் குப்பைத் தொட்டியில் கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாம்பரம் கஸ்தூரிபா நகர் பகுதியில் உள்ள டீக்கடை அருகே இன்று காலை ஏராளமான வாக்காளர் புகைப்படஅடையாள அட்டைகள் கிடந்ததை அப்பகுதியில் கண்டு அதிர்ந்தனர்.
உடனடியாக அப்பகுதியில் அடையாள அட்டைகளை எடுத்துப் பார்த்தபோது அவை அனைத்தும் தாம்பரம்தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் அடையாள அட்டைகள் எனத் தெரிய வந்தது. சுமார் 481 அட்டைகள் அங்குகிடந்தன.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தாம்பரம் போலீஸார் அனைத்து அட்டைகளையும் கைப்பற்றிச் சென்றனர்.இதைக் கண்டித்து அப்பகுதியில் தாம்பரம் காவல் நிலையம் முன்பு கூடி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் வைகை ஆற்றில் ஏராளமான வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்ததுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சென்னையிலும் இதுபோல அடையாள அட்டைகள்கைப்பற்றப்பட்டுள்ளது புதிய கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன.












Click it and Unblock the Notifications