3 பேர் கொலை: போலீஸ் மீது திருமாவளவன் புகார்
திருச்சி:
திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டசம்பவத்தில் காவல் துறையினருக்குத் தொடர்பு உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி அருகே உள்ள நாகமங்கலம் என்ற பகுதியைச் சேர்ந்த சேது, சுரேஷ், கில்லி ஆகிய மூவரும் ஒரு கொலை வழக்குதொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு காரில் வந்து கொண்டிருந்தபோது, அவர்களை தடுத்து நிறுத்திய ஒரு கும்பல் நடுரோட்டில் விரட்டி, விரட்டிக் வெட்டிக் கொலை செய்தது.
இதில் சேதுவின் தலையை அந்தக் கும்பல் துண்டாக வெட்டியது.
இந் நிலையில் இன்று திருச்சி வந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர்மாவட்ட சேது உள்ளிட்ட 3 பேர் பட்டப் பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலையில், இன்ஸ்பெக்டர் அளவிலான சில காவல்துறையினருக்குத் தொடர்பு உண்டு. எனவே இதுகுறித்து சிபிஐவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சிபிஐ விசாரணை கோரி ஆகஸ்ட் 7ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச்சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றார்.