வழக்கறிஞர்கள் போட்டி உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மதுரை உயர் நீதிமன்றக் கிளை தொடர்பான பிரச்சனைகள் குறித்து தீர்வு காண மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டஒருங்கிணைப்புக் குழுவை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அமைத்துள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு அதிக மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்தது, ரிட் மனுக்களை விசாரிக்க அதிகாரம்வழங்கியது ஆகியவற்றை எதிர்த்தும், இதற்காக தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை கண்டித்தும், அவரைஇடமாற்றம் செய்யக் கோரியும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் உள்ளிட்டபோராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

உண்ணாவிரதம் இருந்து வரும் ஒரு வழக்கறிஞர் இன்று மயங்கி விழுந்தார்.

இந் நிலையில், பிரச்சனைக்குத் தீர்வு காண ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை சங்கத் தலைவர் பிரபாகரன்அமைத்துள்ளார். இதில் மூத்த வழக்கறிஞர்களான தமிழ்மணி, சாந்தகுமாரி, நளினி சிதம்பரம், மாசிலாமணி, காந்திஉள்ளிட்ட 23 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையே, போராட்டங்களைக் கைவிட்டுவிட்டு நீதிமன்றப் பணிகளில் ஈடுபடுமாறு வழக்கறிஞர்களுக்குமத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதி கோரிக்கை விடுத்துள்ளார். பிரச்சனை குறித்து என்னுடன் பேசமுன் வந்தால், என்னால் இயன்றதைச் செய்வேன் என்று கூறியுள்ளார்.

கருணாநிதி கோரிக்கை:

இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தாமதப்படுத்தப்படும் நீதி என்பதுதடுக்கப்பட்ட நீதி என்பதை நன்கு உணர்ந்துள்ள வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணைகள் தாமதப்படுவதைகருத்தில் கொண்டு இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இப்போராட்டத்தைக் கைவிட்டு விட்டு வேறு உரிய வழிகளில் போராட அவர்கள் முன் வர வேண்டும் என்றுகோரியுள்ளார்.

இதற்கிடையே தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு ஆதரவாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்களும்போட்டி உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+