வழக்கறிஞர்கள் போட்டி உண்ணாவிரதம்
சென்னை:
மதுரை உயர் நீதிமன்றக் கிளை தொடர்பான பிரச்சனைகள் குறித்து தீர்வு காண மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டஒருங்கிணைப்புக் குழுவை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அமைத்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு அதிக மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்தது, ரிட் மனுக்களை விசாரிக்க அதிகாரம்வழங்கியது ஆகியவற்றை எதிர்த்தும், இதற்காக தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டியை கண்டித்தும், அவரைஇடமாற்றம் செய்யக் கோரியும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் உள்ளிட்டபோராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உண்ணாவிரதம் இருந்து வரும் ஒரு வழக்கறிஞர் இன்று மயங்கி விழுந்தார்.
இந் நிலையில், பிரச்சனைக்குத் தீர்வு காண ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை சங்கத் தலைவர் பிரபாகரன்அமைத்துள்ளார். இதில் மூத்த வழக்கறிஞர்களான தமிழ்மணி, சாந்தகுமாரி, நளினி சிதம்பரம், மாசிலாமணி, காந்திஉள்ளிட்ட 23 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, போராட்டங்களைக் கைவிட்டுவிட்டு நீதிமன்றப் பணிகளில் ஈடுபடுமாறு வழக்கறிஞர்களுக்குமத்திய சட்டத்துறை இணையமைச்சர் வேங்கடபதி கோரிக்கை விடுத்துள்ளார். பிரச்சனை குறித்து என்னுடன் பேசமுன் வந்தால், என்னால் இயன்றதைச் செய்வேன் என்று கூறியுள்ளார்.
கருணாநிதி கோரிக்கை:
இந் நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், தாமதப்படுத்தப்படும் நீதி என்பதுதடுக்கப்பட்ட நீதி என்பதை நன்கு உணர்ந்துள்ள வழக்கறிஞர்கள், வழக்கு விசாரணைகள் தாமதப்படுவதைகருத்தில் கொண்டு இந்தப் போராட்டத்தைக் கைவிட வேண்டும்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு இப்போராட்டத்தைக் கைவிட்டு விட்டு வேறு உரிய வழிகளில் போராட அவர்கள் முன் வர வேண்டும் என்றுகோரியுள்ளார்.
இதற்கிடையே தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு ஆதரவாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்களும்போட்டி உண்ணாவிரதம் தொடங்கியுள்ளனர்.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications