For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹோதா திடீர் நீக்கம்: மர்மம் என்கிறது திமுக

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் போலிமுத்திரைத் தாள் பிரச்சினை தொடர்பாக சிபிஐயிடம் திமுக அளித்த புகாரில் உண்மை உள்ளது என்பதுதெளிவாகியுள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.

அதே நேரத்தில் அவர் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது மர்மமாக உள்ளதாகவும்கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர்,

போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் ஹோதாவுக்குத் தொடர்பு உள்ளதாகவும், அதனால்தான் இந்த வழக்கைசிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டாம் என முதல்வரை அவர் வலியுறுத்தியதாகவும் சிபிஐயிடம் திமுக எம்.பி.செ.குப்புசாமி புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரை முதல்வர் ஜெயலலிதா மறுத்தார். மேலும், புகார் கொடுத்த திமுக வழக்குத் தொடரும்படியும்சிபிஐயிடம் அதிமுகவினர் மனு கொடுத்தனர். ஆனால், அதே புகாரைக் காரணம் காட்டி இப்போது ஹோதாவைதற்காலிக பணி நீக்கம் செய்துள்ளார் ஜெயலலிதா. இதிலிருந்து திமுகவின் புகாரில் உண்மை இருப்பதுதெளிவாகியுள்ளது.

ஹோதா மீதான புகார் குறித்து இத்தனை நாட்களாக தமிழக அரசு ஏன் மறைத்தது என்பதையும், இப்போதுமர்மமான முறையில் திடீரென பதவி நீக்கம் செய்தது ஏன் என்பதையும் முதல்வர் விளக்க வேண்டும். அதிமுகஆட்சியில் எல்லாமே மர்மமாகத் தான் நடக்கிறது.

தமிழக சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து ஆளுநரிடம் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் புகார்கொடுத்ததற்குப் போட்டியாகவே அதிமுக எம்.பிக்கள் சிபிஐயிடம் மனு கொடுத்துள்ளனர். அதில் வேறு எந்தவிஷேசமும் இல்லை என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X