தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது: ஜெ
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டு மாநிலம் அமைதியாக இருப்பதாக முதல்வர்ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் இன்று காவல்துறை கொள்ளை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்து ஜெயலலிதாகூறியதாவது:
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு அமைதியாகவே உள்ளது. தொழிலாளர், மாணவர்கள் பிரச்சனையோ,ஜாதிப் பிரச்சனைகளோ இல்லை. விவசாயிகள், நெசவாளர்கள், அரசியல் கட்சிகள் நடத்தியபோராட்டங்களால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டில் மத மோதல்கள் ஏதும் நடக்கவில்லை. தமிழகத்தில் இப்போது 95,427 போலீசார்உள்ளனர். அரசின் அனுமதியில்லாமல் சிலைகள் வைப்பது சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைஏற்படுத்துகிறது. அதைத் தடுக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிதாக 2,306 பெண் போலீசார் தேர்வு செய்யப்படவுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள்கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3.3 சதவீதம் குறைந்துள்ளது.
சென்னையில் ரோந்துப் பணியையும், காவலையும் அதிகரிக்க கூடுதலாக 36 வாகனங்கள்அளிக்கப்பட்டுளளன. மாநில சட்டம் ஒழுங்கு அமைதியாக இருப்பதால், ஒட்டுமொத்த மாநிலவளர்ச்சியை ஊக்கப்படுத்த வழிகோலுவதாக அமைந்துள்ளது.
குற்றஙகள் குறைந்து வருகின்றன. தீவிரவாத, மதவாத சக்திகள் கண்காணிக்கப்பட்டு அவற்றின்சதிகள் முறியடிக்கப்பட்டுள்ளன என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications