முரண்பாடான தகவல்: உற்சாகமும்சோகமும்
சென்னை:
இராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 3 இந்தியர்கள் விடுதலை செய்ப்பட்டதற்காக பிரதமர் மன்மோகன்சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத் தந்தி அனுப்பியுள்ளார்.
இந்தியர்கள் விடுதலையாகிவிட்டதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் நேற்றிரவு செய்தி வெளியிட்டன.இதையடுத்து கருணாநிதி பிரதமருக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பினார்.
அந்தத் தந்தியில், தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 3 இந்தியர்கள் உள்பட அனைத்து பிணைக் கைதிகளும்விடுதலை பெற்றதற்குப் பாராட்டு தெரிவிக்கிறேன். அவர்களது உயிரைப் பாதுகாக்க நீங்கள் எடுத்துக் கொண்டமுயற்சிகளைப் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த விடுதலைச் செய்தியை மத்திய அரசு இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உறவினர்கள் உற்சாகம்:
இந்திய பிணைக் கைதி-கள் அந்தர்யாமி, திலக்ராஜ் மற்றும் சுக்தேவ் சிங் விடு-விக்கப்பட்ட-தாக தொலைக்காட்சிசெய்தி-களைக் கேட்ட அவர்களது உற-வி-னர்கள் இதை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
உடல் நிலை பாதிக்கப்பட்டி-ருந்த அந்தர்யா-மி-யின் மனைவி, தன் கண-வர் விடு-விக்கப்பட்டார் என்ற செய்தியைக்கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தார். தர்ம-சாலா நெடுஞ்சா-லை-யில் கடந்த இரண்டு நாட்களாக அந்தர்யாமியின்ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்ததால் போக்கு-வ-ரத்து பாதிக்கப்பட்டது.
இப்போது அந்தர்யாமி விடுவிக்கப்பட்டார் என்ற செய்தி வந்ததால் போக்கு-வ-ரத்து மீண்டும் துவங்கி-யது. விடுதலைகுறித்து முரண்பட்ட செய்திகள் நிலவி வருவதால் நேற்றிரவு மகிழ்ச்சியில் இருந்த உறவினர்கள் இப்போது துவண்டுபோயுள்ளனர்.












Click it and Unblock the Notifications