ஏடிபி டென்னிஸ்: கோப்பையை வென்றது பயஸ், பூபதி ஜோடி
டொரண்டோ :
கன-டா-வில் உள்ள டொரண்டோ நக-ரில் நடைபெற்று வரும் ஏ.டி.பி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் இரட்டையர் பட்டத்தைஇந்தி-யா-வின் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடி வென்றது.
அரை-யி-று-திப் போட்டி-யில் இந்திய ஜோடி, மார்க் நாலெஸ் (ப-ஹா-மாஸ்) - டேனி-யல் நெஸ்டர் (க-ன-டா) ஜோடி-யை6-4, 6-4 என்ற நேர் செட்டு-க-ளில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
மற்றொரு அரை-யி-று-தி-யில் ஸ்வீ-ட-னின் ஜோனஸ் பிஜோர்க்மேன்- மேக்ஸ் மிர்னய் (பெலாரஸ்) ஜோடி 7-6, 7-6என்ற செட்க-ளில் பிரான்ஸ் நாட்டின் மைக்கேல் லாட்ரா- பேப்ரைஸ் சன்டோரா ஜோடியை தோற்கடித்து இறு-திப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டியில் இரு ஜோடிகளும் போட்டி மோதின. இதில் பயஸ்-பூபதி ஜோடி, பிஜோர்க்மேன்-மிர்னய்ஜோடியை 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இரட்டையர் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன் மூலம் 2.5மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையை இந்த ஜோடி பெற்றது.
பயஸ்-பூபதி ஜோடி கைப்பற்றிய 23 பட்டம் இதுவாகும். அதோடு 5வது மாஸ்ட்ர்ஸ் பட்டம் இதுவாகும்.