மன்மோகன் சிங்குடன் அத்வானி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி :
நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் அத்வானி பிரதமர் மன்மோகன்சிங்கைச் சந்தித்துப் பேசினார்.
குற்ற வழக்குகளில் சம்பந்தமுடைய அமைச்சர்களை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறிஎதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் விளைவித்து வருகின்றன.
இப் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அத்வானியைஅழைத்திருந்தார். அழைப்பை ஏற்று அத்வானி இன்று சட்டர்ஜியை சந்தித்துப் பேசினார். இதனையடுத்துபிரதமரைச் சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்கு பின்னர் வெளியில் வந்த அத்வானி செய்தியாளர்களைச் சந்திக்கமறுத்து விட்டார்.
சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சோம்நாத் சட்டர்ஜி, எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற புறக்கணிப்புவிரைவில் முடிவிற்கு வரும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications