தினமலர் அலுவலம் மீது பாமக பயங்கர தாக்குதல்

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூரில் தினமலர் பத்திரிக்கை அலுவலகத்தின் மீது பா.ம.கவினர் பயங்கர தாக்குதல் நடத்தினர்.பத்திரிக்கை அலுவலகத்தை சூறையாடியதோடு, ஊழியர்களையும் தாக்கினர். இதில் இருவர்காயமடைந்தனர்.

தினமலர், பா.ம.க இடையே நீண்ட நாட்களாகவே மோதல் நடந்து வருகிறது. தங்களை தினமலர்மிகக் கடுமையாக விமர்சித்து வருவதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பல முறைபத்திரிக்கையாளர் சந்திப்புகளிலேயே பாய்ச்சல் காட்டியுள்ளார்.

தினமலர் நிருபர் கேள்வி கேட்டாலே, ஏட்டிக்குப் போட்டியாகவே பதில் தருவார் ராமதாஸ்.

இந் நிலையில் இன்று கடலூர் தினமலர் அலுவலகத்தின் மீது பா.ம.கவினர் பயங்கர தாக்குதல்நடத்தினர். இரும்புக் கம்பிகள், உருட்டுக் கட்டைகளுடன் காரில் வந்த 6 பா.ம.கவினரும் தங்களைசரமாரியாகத் தாக்கியதாக ஊழியர்களில் ஒருவரான வீரகுமார் காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளார்.

அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், டெலிபோன்கள், நாற்காலிகளை அடித்து உடைத்த 6பேரும் பின்னர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

தாக்குதல் நடந்தபோது 10 பேர் அலுவலகத்தில் இருந்ததாகவும் 8 பேர் தப்பி வெளியில் ஓடிவந்துவிட்டதாகவும், இருவருக்கு சிறிது காயம் ஏற்பட்டதாகவும் வீரகுமார் தனது புகாரில்கூறியுள்ளார்.

கடலூர் அலுவலகத்தில் இருந்து தான் தினமலரின் பாண்டிச்சேரி பதிப்பு தயாராகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+