வீராணம் பகுதி பாலைவனம் ஆகும் அபாயம்: ராமதாஸ்
சென்னை:
புதி வீராணம் திட்டத்தால் அப்பகுதியே பாலைவனம் ஆகும் அபாயம் உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
வீராணம் திட்டத்தின்படி, ஏரியின் உபரி நீர் மட்டுமே சென்னைக்கு வர வேண்டும். தற்போது, வரும் 7.5 கோடிலிட்டர் தண்ணீரும் வீராணம் நீர் இல்லை. காரணம் வீராணம் ஏரியில் தற்போது தண்ணீரே இல்லை.
வீராணம் திட்டத்தால் அப்பகுதியில் விவசாயத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.ஆனால், தற்போது வீராணம் பகுதியே பாலைவனம் ஆகும் வகையில், 1,000 அடி ஆழத்துக்கு 42 ராட்சதஆழ்குழாய்க் கிணறுகள் போடப்பட்டுள்ளன.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால் வீராணம் திட்டத்துக்கு அவசியம் இல்லை.
கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் மிகவும் மலிவானது. ஒரு லிட்டர் தண்ணீரை 5 பைசாவுக்குப் பெற முடியும் என்றுமத்திய அரசின் அணுசக்தித் துறைச் செயலரும் அணுசக்தி ஆணையத் தலைவருமான அனில் ககோட்கர்கூறியிருக்கிறார்.
இத்திட்டத்தின்படி, லிட்டருக்கு 5 பைசா வீதம் ஒரு நாளுக்கு 7.5 கோடி லிட்டர் தண்ணீரைப் பெற மாதத்துக்குஆகும் செலவு ரூ.11.25 கோடிதான். ஆண்டுச் செலவு ரூ.135 கோடி. வீராணம் திட்டத்துக்கு ஆகும் செலவில் இதுபாதிதான்.
பாதி செலவிலேயே தண்ணீர் பெறும் நிரந்தர திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டு, தாற்காலிகமான வீராணம்திட்டத்தை நிறைவேற்றுவது எந்த வகையில் நியாயம் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.