வாஜ்பாய்க்கு கொலை மிரட்டல்
டெல்லி:
சுதந்திரன தினத்தன்று (ஆகஸ்ட் 15) முன்னாள் பிரதமர் வாஜ்பாயைக் கொல்லப் போவதாக ஒரு தொலைபேசிமிரட்டல் வந்துள்ளது.
டெல்லியில் சுதந்திர தின பாதுகாப்பு வேலைகளில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினருக்கு ஒரு மர்மதொலைபேசி அழைப்பு வந்தது. செல்போனில் பேசிய அந்த மர்ம மனிதன், சுதந்திர தினத்தன்று வாஜ்பாயைக்கொலை செய்யப் போகிறோம் என்று கூறி விட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்து விட்டான்.
இந்த கொலை மிரட்டல் குறித்து பாதுகாப்பு படையினர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் மற்ற பாதுகாப்பு படைபிரிவுகளுக்கும் உடனடியாகத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து வாஜ்பாய்க்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் குடியிருக்கும் கிருஷ்ணமேனன்மார்க் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொலை மிரட்டல் விடுத்த மர்ம மனிதனை டெல்லி போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications