சத்துணவு திட்டம்: காங். எம்.பியின் கையெழுத்து இயக்கம்
சென்னை:
இந்தியா முழுவதும் சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் கட்சி எம்.பி. சுதர்சன நாச்சியப்பன்கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
காமராஜர் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்சத்துணவுத் திட்டமாக உருமாறியது. இந்த மதிய உணவுத் திட்டத்தை நாடு முழுவதும் அமுல்படுத்த வேண்டும் எனதமிழக காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சிவகங்கையைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சனநாச்சியப்பன் கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
சென்னை ஓட்டேரியில் ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தைத் தொடங்கி வைத்து கையெழுத்து இயக்கத்தை அறிவித்தசுதர்சன நாச்சியப்பன், ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெற திட்டமிட்டுள்ளேன். பிரதமர் மன்மோகன் சிங்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் கையெழுத்துக்களும் பெறப்படும் என்றார்.