மீனவர்களை மீட்க கோரி கருணாநிதி கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 25 நாகப்பட்டனம் மீனவர்களை உடனடியாக மீட்பதற்குத்தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரி வெளியுறவுத்துறை அமைச்சர்நட்வர் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் 4ம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25நாகப்பட்டனம் மாவட்ட மீனவர்களை, இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்று விட்டனர். இதனால்அவர்களது குடும்பத்தினர் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் பத்திரமாக மீட்பதற்குத் தேவையானநடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications