வைகோ: உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்குகளை வாபஸ் பெறும் தமிழகஅரசின் அறிவிப்பை ஏற்று முடிவெடுக்குமாறு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக பூந்தமல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மனு தாக்கல்செய்துள்ளார்.
இந் நிலையில், பொடா மறு ஆயுவுக் குழு உத்தரவிட்ட பிறகும் வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க தமிழக அரசுமறுத்து வந்ததை எதிர்த்து வைகோ உள்ளிட்ட 9 பேரும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்றுவிசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.பி.ராவ், வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதானவழக்குகளை வாபஸ் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும், கடந்த மே 7ம் தேதி, வைகோஉள்ளிட்டவர்கள் மீதான பொடா வழக்கை விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இந்தத் தடை காரணமாக வைகோ உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து வைகோ உள்ளிட்ட 8 பேர் மீதான பொடா வழக்கை வாபஸ் பெறும் தமிழக அரசின் அறிவிப்பைஏற்று, முடிவெடுக்குமாறு பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் வரியவா, ஏ.கே.மாத்தூர் ஆகியோர் அடங்கியபெஞ்ச் உத்தரவிட்டது.
மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை 4 வாரங்களுக்குத் தள்ளிவைக்கப்பட்டது.