கோவையில் கடத்தப்பட்டவர் சேலத்தில் மீட்பு
சேலம் :
பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்தப்பட்ட கோவை தொழிலதிபர் சேலத்தில் மீட்கப்பட்டார். அவரைக் கடத்திய4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கோவை கோவிந்தநாயக்கன் பாளையம் வடக்கு வீதியை சேர்ந்த தொழில் அதிபர் ரவி. இவரும், இவரதுமைத்துனர் சுந்தர்ராஜனும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கடத்தப்பட்டார்கள். அவர்களைக் கடத்தியவர்கள்ரவியையும், சுந்தர்ராஜனையும் விடுவிக்க, ரவியின் மனைவியிடம் 50,000 ரூபாய் கேட்டனர்.
ரவியின் மனைவி 40,000 ரூபாய் கொடுத்தார். பின்னரும் அவர்கள் விடுவிக்கப்படாததால் ரவியின் மனைவிபோலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
ரவியையும், சுந்தர்ராஜனையும் கடத்தியவர்கள் அவர்களை சேலத்தில் ஒரு அறையில் கட்டி வைத்திருப்பதைக்கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீஸார் அங்கு சென்று ரவியை மீட்டனர். அவரைக் கடத்திய நால்வரைக்கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40,000 பணத்தையும் மீட்டனர் .












Click it and Unblock the Notifications