திருட வந்து அடி வாங்கி இறந்த கொள்ளையன்

Subscribe to Oneindia Tamil

கரூர்:

கரூரில் கொள்ளையடிக்க வந்த நபரை பொதுமக்கள் அடித்து வீழ்த்தியதில் அந்த கொள்ளையன் பரிதாபமாகஇறந்தான்.

கரூரைச் சேர்ந்தவர் விவசாயி சுப்ரமணியன். இவரது வீடு நகருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இவரது வீட்டிற்குஇன்று அதிகாலை சில கொள்ளையர்கள் வந்துள்ளனர்.

கொள்ளையர்கள் சப்தம் கேட்டு எழுந்த சுப்ரமணியன் அவர்களைப் பிடிக்க முயன்றுள்ளார். இதில் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒரு நபர் மட்டும் சிக்கிக் கொண்டார்.

அவரைப் பிடித்துக் கொண்ட சுப்ரமணியன் குரல் எழுப்பவே பலரும் அங்கு ஓடி வந்து திருடனைப் பிடித்து அடித்துஉதைத்தனர். இதில் திருடன் மயங்கி விழுந்தான். இந்த மோதலில் சுப்ரமணியும் காயமடைந்து மயங்கி விழுந்தார்.

இருவரும் கரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கொள்ளையன் சிகிச்சை பலனின்றிஇறந்தான். சுப்ரமணியனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடிபட்டு இறந்த கொள்ளையன் யார், எந்த ஊரைச்சேர்ந்தவன் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+