For Quick Alerts
For Daily Alerts
Just In
கிருஷ்ணகிரி: ரூ. 23 கோடி ஹெராயின் பறிமுதல்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் ரூ. 23 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதை இலங்கைக்குக் கடத்த முயன்ற மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.
காரில் ஹெராயின் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து மத்திய போதைப் பொருள்தடுப்புத் துறையினர் டிஐஜி சங்கர் ஜீவல் தலைமையில் தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையில்சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு காரில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு,அதிலிருந்த 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
காரிலிருந்து 23 கிலோ ஹெராயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதன சந்தை மதிப்பு ரூ.23 கோடியாகும்.
ராஜஸ்தானில் இருந்து இந்த போதைப் பொருள் தமிழகத்துக்குக் கடத்தி வரப்பட்டுள்ளது.ராமேஸ்வரம் மூலமாக இலங்கைக்கு அது கடத்தப்பட இருந்ததாக டிஐஜி தெரிவித்தார்.
Comments
Story first published: Wednesday, August 18, 2004, 5:30 [IST]