செக் மோசடி: பொன்முடிக்கு பிடிவாரண்ட்
திருப்பூர்:
செக் மோசடி வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டைபல்லடம் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
பல்லடம் அருகில் உள்ள கருமத்தம்பட்டி மூக்கன் தோட்டத்தைச் சேர்ந்த ராமசாமி (45) என்பவரிடம் பொன்முடி ரூ.50,000 கடன் வாங்கியிருக்கிறார். கடன் தொகையை ராமசாமி திருப்பிக் கேட்ட போது பொன்முடி ரூ. 50,000க்குசெக் கொடுத்துள்ளார்.
ஆனால் பொன்முடியின் கணக்கில் பணம் இல்லாமல் செக் திரும்பி விட்டது. இதையடுத்து பொன்முடி மீது ராமசாமிபல்லடம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தொடர்பான விசாரணையின் போது நீதிமன்றத்தில்ஆஜராகும்படி பொன்முடிக்கு நீதிபதி அருணாசலம் சம்மன் பிறப்பித்தார்.
ஆனால், பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனையடுத்து பொன்முடி மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது சூலூர்போலீசார் பொன்முடியை கைது செய்ய தேடி வருகின்றனர்.
பொன்முடி மீது அவிநாசி நீதிமன்றத்தில் ஏற்கனவே ஒரு செக் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில்அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications