மீண்டும் ஆசிரியராவேன்: அப்துல் கலாம்
ஸ்ரீநகர்:
ஜனாதிபதி பதவிக் காலம் முடிந்தவுடன் மீண்டும் ஆசிரியர் பணிக்குத் திரும்பப் போவதாக அப்துல்கலாம் கூறியுள்ளார்.
ஸ்ரீநகர் சென்றுள்ள கலாம் அங்கு தேசிய தொழில்நுட்பவியல் கழகத்தில் மாணவர்களின்கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவர், ஜனாதிபதி பதவியின் காலம் முடிந்த பின்என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த கலாம், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியில்இருந்தபோது தான் ஜனாதிபதியானேன். இந்தப் பதவிக் காலம் முடிந்தவுடன் கல்விப் பணிக்குத்திரும்பி விடுவேன். எனக்காக நீங்கள் காத்திருக்கலாம் என்றார்.
உண்மையிலேயே உங்களுக்கு இந்த ஜனாதிபதி பதவி பிடித்திருக்கிறதா என்ற இன்னொருமாணவனின் கேள்விக்கு பதிலளித்த கலாம்,
ஒரு செயற்கைக் கோளை தயாரித்து விண்ணில் வெற்றிகரமாக ஏவுகிறோம். அப்போது பெருமகிழ்ச்சி கிடைக்கும். அக்னி ஏவுகணையைத் தயாரித்து அது தனது இலக்கை சரியாகத் தாக்குகிறது.அப்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லை. ஆனால், இப்போது நான் வேறு முக்கியமானவேலையில் இருக்கிறேன். 100 கோடி மக்களின் முகங்களிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரும்முயற்சியில் இருக்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications