For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இராக்: இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

By Staff
Google Oneindia Tamil News

மாஸ்கோ:

இராக்கில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட இந்தியர்கள் மூவரும் பாதுகாப்பாக இருப்பதாகவெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் தெரிவித்தார்.

கொழும்பு செல்லும் வழியில் சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,

அவர்களை விடுவிக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகின்றன. இது போன்ற விஷயங்களில் கால நேரத்தைநிர்ணயிக்க முடியாது. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.

இந்தியர்களை பணிக்கு அமர்த்திய குவைத் கல்ப் நிறுவனத்திடம் மீட்கும் பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இராக்கின் பாதுகாப்பு நிலையை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் இந்தியா ஜாக்கிரதையாக செயல்பட்டுவருகிறது.

இந்தியர்களை தீவிரவாதிகள் நல்ல முறையிலேயே வைத்துள்ளனர். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர் என்றார்.

அந்தர்யாமி, திலக்ராஜ், சுக்தேவ் சிங் ஆகிய மூன்று இந்தியர்களையும் மூன்று கென்யர்களையும் ஒருஎகிப்தியரையும் தீவிரவாதிகள் கடந்த ஜூலை 21ம் தேதி கடத்திச் சென்றனர்.

இவர்களை மீட்க தீவிரவாதிகள் நியமித்த துலாய்மி என்ற தூதுவர் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியது குவைத்கல்ப் போக்குவரத்து நிறுவனம்.

ஆனால், பண பேரம் காரணமாக பேச்சில் முன்னேற்றம் ஏற்படாததால் அதிலிருந்து விலகிக் கொண்ட அந்தநிறுவனம், நேரடியாகவோ அல்லது வேறு தூதர் மூலமோ தான் இனி தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவோம்என்று கூறிவிட்டது.

ஆனால், தீவிரவாதிகள் இதுவரை வேறு தூதர் யாரையும் அறிவிக்கவில்லை. இதனால் சிக்கல் நீடித்துக்கொண்டுள்ளது.

44 இந்தியர்கள் திரும்பினர்:

இதற்கிடையே ஈராக்கில் வேலைக்குச் சென்ற இந்தியர்களில் 44 பேர் நாடு திரும்பிவிட்டதாக இன்றுநாடாளுமன்றத்தில் இன்னொரு வெளியுறவுத்துறை இணையமைச்சரான ராவ் இந்தர்ஜித் சிங் தெரிவித்தார்.

இதில் 30 பேர் பலூஜாவில் அமெரிக்க முகாமில் இருந்ததாகவும், 14 பேர் வடக்கு ஈராக்கில் சிக்கி இருந்ததாகவும்தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X