தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு: பாமக
சென்னை:
சமீபத்தில் மகாராஷ்டிரத்தில் கொண்டு வரப்பட்டதைப் போல தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தசட்டம் கொண்டு வரப் வேண்டும் என்று சென்னையில் நடந்த பாமக மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக சார்பில் சென்னையில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு தொடர்பான மாநாடு நடந்தது. நிகழ்ச்சிக்கு பாமகதலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். அதில் மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேயும் கலந்துகொண்டார்.
தமிழகத்தில் தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கோரி மாநாட்டில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அரசுத் துறை நிறுவனங்கள் எல்லாமே தனியார்மயமாக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் போராடிப் பெற்ற இட ஒதுக்கீடுபறிபோய்விட்டதாகவும் கூறிய ராமதாஸ், இதனால் இனி தனியார் நிறுவன வேலை வாய்ப்புக்களிலும் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்றார்.
மேலும் வேலைக்கு ஆள் எடுப்பதையே தமிழக அரசு நிறுத்திவிட்டதால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள்அரசு வேலையில் சேருவதும் அடியோடு நின்றுவிட்டது என்றார்.
முதல்வர் ஷிண்டே பேசுகையில், இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதே சமூக நீதியை நிலை நாட்டத்தான்.இப்போது தனியார்மய காலம். அதற்கு ஏற்றார்போல இட ஒதுக்கீட்டிலும் மாற்றம் செய்தால் தான் சமூக நீநிதியைநிலை நாட்ட முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications