நாகர்கோவில், கும்பகோணத்துக்கு புதிய ரயில்கள்
சென்னை:
சென்னையிலிருந்து வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கும்பகோணம், நாகர்கோவில் நகர்களுக்கு புதிய விரைவுரயில்கள் இயக்கப்படவுள்ளன.
தெற்கு ரயில்வேயின் கால அட்டவணையை சென்னையில் வெளியிட்டுப் பேசிய ரயில்வேத்துறை இணைஅமைச்சர் ஆர்.வேலு,
சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு தினசரி விரைவு ரயில் செப்டம்பர் 1ம் தேதி முதல் இயக்கப்படவுள்ள. இந்தரயில் திருச்சி, தஞ்சாவூர் மார்க்கமாக கும்பகோணம் செல்லும். தினசரி இரவு 10.30 மணிக்கு சென்னைஎழும்பூலிருந்து இந்த ரயில் கிளம்பும்.
இதேபோல, சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு விரைவு ரயில் ஒன்று சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்துஇயக்கப்படும். இந்த இரண்டு ரயில்களும் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தன. அதை இப்போதுஅமலாக்கிவிட்டோம்.
இதுதவிர மதுரை-டெல்லி நிஜாமுதீன் இடையிலான புதிய வாரம் இருமுறை விரைவு ரயில் இயக்கப்படும் தேதிவிரைவில் அறிவிக்கப்படும் என்றார் வேலு.












Click it and Unblock the Notifications