சென்னை டாக்டர் குடும்பம் ம.பியில் படுகொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையச் சேர்ந்த டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மத்திய பிரதேச மாநிலம்ஜான்சியில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜான் சுந்தர். இவர் ஒரு நரம்பியல் டாக்டர். இவர் தனதுமனைவி ஹென்னா, தாயார் பங்கஜம் ஆகியோருடன் மத்திய பிரதேச மாநிலம் ஜான்சியில் வசித்துவந்தார்.
ஜான்சியில் சமீபத்தில் ஜான் சுந்தர் நிலம் வாங்கியுள்ளார். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர் இங்கு நிலம்வாங்குவதா என்று அப்பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், ஜான் சுந்தருடன் மோதலில் ஈடுபட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த 25ம் தேதி ஜான் சுந்தர், ஹென்னா, பங்கஜம் ஆகியோரை அக்கும்பலைச்சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு ஜான் சுந்தர் மற்றும் 3 பேரின் உடல்களும் சென்னைக்குக்கொண்டு வரப்பட்டன.












Click it and Unblock the Notifications