கும்பகோணம்: நீதிபதி விசாரணை இன்று தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளி தீவிபத்து தொடர்பாக தமிழக அரசால் நியமித்த ஒரு நபர் விசாரணைக் கமிஷன் நீதிபதிசம்பத் இன்று தனது விசாரணையைத் தொடங்குகிறார்.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் ஏற்பட்ட கொடூரமான தீவிபத்தில் 94 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த, நீதிபதி சம்பத் தலைமையில் தமிழக அரசு ஒரு நபர் விசாரணைக்கமிஷனை அமைத்தது.
அதன்படி நீதிபதி சம்பத் இன்று தனது விசாரணையைத் தொடங்குகிறார். இன்று தஞ்சாவூர் வரும் அவர், மாவட்டஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நாளை கும்பகோணம் செல்லும் அவர், அங்கு இரண்டு நாட்கள் தங்கி விசாரணை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications