விவசாயிகள் மீது ஜெ.க்கு அக்கறை இல்லை: நல்லக்கண்ணு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விவசாயிகள் நலன் மீது முதல்வர் ஜெயலலிதாவுக்கு அக்கறை இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலசெயலாளர் நல்லக்கண்ணு கூறினார்.

இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

விவசாயிகள் நலன் குறித்து இந்த அரசுக்கு அக்கறை இல்லை. வறட்சி நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்குதாமதமாக கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

சம்பா சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இருப்பினும் விவசாயிகளுக்கு உரிய பயிர்கடன் கிடைக்கவில்லை.

நிபந்தனை எதுவும் இன்றி விவசாயிகள் உடனடியாக கடன்பெற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலஅரசை வற்புறுத்தி தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 13-ம் தேதி மாவட்ட தலைநகரங்கள் உள்பட 100இடங்களில் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மறியல் அறப்போராட்டம் நடத்தும்.

ஆளுநர்கள் மீது அதிக அளவு புகார்கள் வந்தால் மத்திய அரசு அவர்களை மாற்றுவதில் எந்தவித தவறும் இல்லை.அதேநேரத்தில் ஆளுநர் நியமனத்தின் போது மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கருத்தும்நியாயமானதுதான்.

தமிழக அரசு பெரிய திட்டங்களை ஒப்பந்தக்காரர்களின் லாபத்திற்காக மட்டுமே கொண்டு வருகிறது. அதில்மக்கள் நலன் இல்லை.

பாஜகவினருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. மக்கள் பிரச்சினை குறித்து பேசாமல் ஜனநாயகரீதியாக தேர்வு செய்யப்பட்ட அரசை இயங்க விடாமல் தடுக்கிறார்கள்.

நாளை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம்நடக்கிறது. அதில் நாடாளுமன்றத்தில் பா.ஜகவினரின் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+