சென்னை, வேலூரில் பொடா கைதிகள் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மற்றும் வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 பெண்கள் உள்ளிட்ட பொடா கைதிகள்கடந்த 4 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருவதாகத் தெரிகிறது.
பொடா சட்டத்தை முன் தேதியிட்டு வாபஸ் பெற மத்திய அரசு முன் வர வேண்டும் என்று கோரிஇவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
நக்சலைட்டுகளான ரீட்டா மேரி, ரீனா மேரி, விஜயா, சத்யமேரி,யசோதா ஆகிய 5 பேரும்,சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 6 பேரும் இந்த உண்ணாவிரதத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட சில பொடா கைதிகளும்உண்ணாவிரதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications