தினமலர் மீது ஸ்டாலின் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ. 18 கோடி வங்கி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்று செய்தி வெளியிட்டதற்காக தினமலர் நாளிதழ் மீதுதிமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தினமலர் நாளிதழில் வெளியாகும் வாசகர் கடிதம் பகுதியில், மு.க.ஸ்டாலின் இந்தியன் வங்கியிலிருந்து கடனாகப்பெற்ற ரூ. 18 கோடியைத் திருப்பிச் செலுத்தவில்லை என்று வாசகர் ஒருவர் எழுதிய கடிதம் பிரசுரமாகியது.

இந்தச் செய்தி தவறானது என்றும், இதற்கு மறுப்பும் வருத்தமும் தெரிவிக்குமாறு தினமலர் ஆசிரியர்கிருஷ்ணமூர்த்தி, பதிப்பாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு வழக்கறிஞர் மூலம் ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால் இதற்கு தினமலர் பதில் அளிக்காததால், அந்த நாளிதழ் மீது ஸ்டாலின் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஸ்டாலின் தனது வழக்கறிஞர்களுடன் ஆஜராகி இந்தவழக்கைத் தாக்கல் செய்தார்.

இதில் நாளிதழ் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த மனு மீதானவிசாரணை வரும் 3ம் தேதி நீதிபதி ரோசய்யா முன்னிலையில் நடக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+