போஸ்ட் ஆபிசில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு
சென்னை:
வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் வரும் 15ம் தேதியிலிருந்து அஞ்சல் துறை ஊழியர்கள் ஈடுபடஉள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியிலிருந்துநீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விசாரணை நடத்தியது.
இந் நிலையில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியை தபால் நிலையங்களில் நடத்த தேர்தல் ஆணையம்தீர்மானித்துள்ளது. இந்த பணி வரும் 15ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் முதல் அடுத்த மாதம் 15ம் தேதிவரை எல்லா தபால் நிலையங்களிலும் அந்தந்த பகுதிக்குரிய வாக்காளர் பட்டியல் ஒட்டப்பட்டிருக்கும். அதில்தங்களது பெயர் இருக்கிறதா என்பதை வாக்காளர்கள் சரிபார்க்க வேண்டும்.
பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து குடும்பத்தில் யாரேனும் ஒரு நபர் மூலம் கொடுத்துஅனுப்பலாம். அரசியல் கட்சிகள், அடுக்குமாடி குடியிருப்பு சங்கங்கள் சார்பில் மொத்தமாக கொடுக்கப்படும்விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி கடிதத்தை தபால் அலுவலகம் உடனடியாக வழங்கும்.இதனையடுத்து விண்ணப்பபடிவங்களை சரிபார்க்கும் பணியை தபால் விநியோகிக்கும் ஊழியர்கள் செய்வார்கள்.
தபால் ஊழியர்கள் சரிபார்த்த பின்பு அந்த விண்ணப்ப படிவங்களை தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதி வாரம் ஒருமுறை பெற்றுச் செல்வார்.
மேலும் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் குறித்தும் தபால் ஊழியர்கள் விசாரித்து தேர்தல்ஆணையத்துக்கு கடிதம் கொடுப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தப் பணியில் வழக்கமாக மாநில அரசு ஊழயர்களும் ஆசிரியர்களுமே அமர்த்தப்படுவது வழக்கம். அதில்ஏகப்பட்ட குளறுபடிகளை ஊழியர்கள் செய்துவிட்டதாக அதிமுகவும், மாநில அரசு குழறுபடி செய்துவிட்டதாகதிமுகவும் லாவணி பாடின. இந் நிலையில் இந்தப் பணி தபால்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தத் துறையின் அமைச்சராக திமுகவின் தயாநிதி மாறன் தான் இருக்கிறார். இதனால் அதிமுக தரப்பிலிருந்துஇதற்கும் எதிர்ப்பு எழலாம் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications