யானைக்கால் தடுப்பு மாத்திரை சாப்பிட்ட 2 பேர் பலி
திருச்சி:
அரசு ஊழியர்கள் வழங்கிய யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரையை சாப்பிட்ட இருவர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏறபட்டு பலியாயினர்.
திருச்சி காஜாமலை, செந்தண்ணீர்புரம், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பலருக்கு திடீரென வாந்தி,மயக்கம், வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் திருச்சி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்ததங்முகத்து, காஜாமலையைச் சேர்ந்த வேலு ஆகியோர் இறந்தனர்.
சமீபத்தில் தமிழக அரசின் சார்பில் யானைக்கால் நோய் தடுப்புக்கான மாத்திரைகள் வீடு வீடாகவினியோகிக்கப்பட்டன. இந்த மாத்திரைகள் காஜாமலை, கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலும்வினியோகிக்கப்பட்டது.
இந்த மாத்திரைகளை சாப்பிட்டதால்தான் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இவர்கள் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இவர்கள் சாவுக்கு மாத்திரை தான் காரணமா என்பது தீவிர விசாரணை நடத்தி வருவதாக சுகாதாரத்துறைதெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications