வீடியோ ஆதாரம்: போலீஸ் வயிற்றைக் கலக்கும் ஜெயலட்சுமி
மதுரை:
போலீஸ் அதிகாரிகள் என்னைக் கொடுமைப்படுத்தியதை வீடியோ ஆதாரங்களுடன் சிபிஐயிடம் தெரிவிப்பேன்என்று போலீஸ் புகழ் ஜெயலட்சுமி கூறினார்.
மதுரை அரசு பெண்கள் காப்பகத்தில் இருந்த, எல்லீஸ் நகரில் இருக்கும் தனது வீட்டுக்கு வந்த ஜெயலட்சுமியிடம்பேட்டி காண பத்திரிக்கையாளர்கள் அவர் வீட்டு முன்பு கூடினர். அவர்களிடம் ஜெயலட்சுமி, தனதுவழக்கறிஞர்கள் இல்லாமல் யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்று கூறினார்.
இதையடுத்து நிருபர்கள், ஜெயலட்சுமியின் வழக்கறிஞர்கள் அழகர்சாமி, வெங்கடேசன் ஆகியோருடன் தொடர்புகொண்டனர். இதனையடுத்து வழக்கறிஞர்கள் ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வந்தனர். அதன்பின்புபத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயலட்சுமி கூறியதாவது:-
போலீஸ் அதிகாரிகளால் நான் மிகுந்த கொடுமைக்கு உள்ளானேன். இன்ஸ்பெக்டர் ஷாஜகானும் அவரது,மைத்துனரான அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் உதவியாளரும் சேர்ந்து என்னை 5 வருட ஒப்பந்த அடிப்படையில்மும்பை விபச்சார விடுதியில் விற்க முயற்சி செய்தனர். பின்பு நான் அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தேன்.
எனக்கு நேர்ந்த துன்பங்கள் வேறு எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. இந்த வழக்கின் தீர்ப்பு தவறு செய்தபோலீஸார்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும்.
நான் ஒட்டுமொத்த காவல் துறையை குற்றம் சாட்டவில்லை. தவறு செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்படவேண்டும். சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எத்தனை மிரட்டல்கள்வந்தாலும் அதற்கு பயப்படாமல் சிபிஐயிடம் அனைத்து உண்மைகளையும் சொல்வேன்.
போலீஸ் அதிகாரிகள் எனக்கு இழைத்த கொடுமைகளை வீடியோ கேசட், போட்டோ ஆதாரங்கள் மூலம் சிபிஐவிசாரணையில் தெரிவிப்பேன்.
எனது பெயரில் ஏதாவது சொத்து, பணம் இருந்தால் நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட நான்தயாராக இருக்கிறேன் என்று ஜெயலட்சுமி கூறினார்.
இதற்கிடையே, ஜெயலட்சுமி இப்போது கடுமையான பணநெருக்கடியில் இருப்பதாகவும், சாப்பாட்டுக்கு கூடஅவரது வழக்கறிஞர் அழகர்சாமி தான் கொடுத்து உதவுவதாகவும் கூறப்படுகிறது.