பாலியல் துன்புறுத்தல்: நர்சிங் மாணவிகள் மறியல்
திருநெல்வேலி:
பாலியல் தொந்தரவுக்கு ஆளான குற்றாலம் தனியார் நர்சிங் பயிற்சி நிறுவன மாணவிகள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைமுற்றுகையிட்டு புகார் மனு கொடுத்தனர். அதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் மாணவிகள் இன்று சாலை மறியலில்ஈடுபட்டுள்ளனர்.
குற்றாலத்தில் தமிழ்நாடு இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸ் என்ற தனியார் நர்சிங் பயிற்சி நிறுவனம் உள்ளது. சட்டீஸ்கர்மாநிலத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று இந்த நிறுவனம் செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் சேர்ந்த 60க்கும்மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் ரூ.8,000 முதல் ரூ.15,000 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இங்கு படிக்கும் மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மாவட்டர் ஆட்சியர் அதுல் ஆனந்த்வந்ததும் அவரிடம் மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில், பயிற்சிக்காக ஏராளமான பணம் செலுத்தி விட்டோம். இப்போது இந்நிறுவனமே போலி என தெரியவந்துள்ளது.
நிறுவனத்திற்குத் தொடர்பில்லாத வெளி ஆட்கள் வந்து மாணவிகளை பாலியல்ரீதியில் பயன்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, எங்களதுப்ளஸ் 2 சான்றிதழ்களையும், நாங்கள் செலுத்திய பணத்தையும் திருப்பித் தரவேண்டும். வேறு நல்ல பயிற்சி மையத்தில் எங்களது படிப்பைத்தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
மாவட்ட ஆட்சியர் இந்தப் புகார் குறித்து தென்காசி சப்-கலெக்டரை விசாரிக்க உத்தரவிட்டார்.
இதே பயிற்சி மையத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்த முயற்சி நடந்ததாகவும்மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததும், அதன்பின்பு தென்காசி சப் கலெக்டர், தாசில்தார் அங்குசென்று நேரில் விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
அதன்பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்தான் மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இப்போதும் தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் இன்று அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
-
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே!











Click it and Unblock the Notifications